முகப்பு
வேலூர்

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல்

அரக்கோணம் நகர பஜாரில் மொத்த விலைக் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

அரக்கோணம் நகர பஜாரில் மொத்த விலைக் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை உணவுப் பாதுகாப்பு துறையினர் புதன்கிழமை பறிமுதல் செய்தனர். 
அரக்கோணம் நகர பஜார் தெருவில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்கப்படுவதாக அரக்கோணம் உணவுப் பாதுகாப்பு அலுவலர் தேவராஜுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவருடன் உணவுப் பாதுகாப்புத் துறையினர் புதன்கிழமை அங்குள்ள பல கடைகளில் சோதனை நடத்தினர். 
அப்போது, பஜார் தெருவில் இருந்த ஒரு கடையில் ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அக்கடையில் இருந்த உணவுப் பொருள்களின் தரம், தயாரிப்பு தேதி உள்ளிட்டவை குறித்தும் சோதனை நடத்தப்பட்டது. 
இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும். பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலரின் உத்தரவு பெற்று அழிக்கப்படும் என உணவுப் பாதுகாப்பு அலுவலர் தேவராஜ் தெரிவித்தார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →