மியான்மரில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆம்பூர் சார் பதிவாளர் அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு வேலூர் மாவட்டத் தலைவர் அ. ஜூபைர் அஹமத் தலைமை வகித்தார்.
நகரச் செயலாளர் ரபீக் அஹமத், நிர்வாகிகள் பிர்தோஸ் அஹமத், காதர் மொய்தீன், ஜாபர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.