கோபுர மின் பாதை பணி: 10 கிராமங்களில் 6 நாள்களுக்கு மின் நிறுத்தம்
வாணியம்பாடி அருகே கோபுர மின் பாதை அமைப்பதால் 10 கிராமங்களில் 6 நாள்களுக்கு மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
வாணியம்பாடி அருகே கோபுர மின் பாதை அமைப்பதால் 10 கிராமங்களில் 6 நாள்களுக்கு மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து வாணியம்பாடி கோட்ட மின் செயற் பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கை:
வாணியம்பாடியை அடுத்த சிக்ணாங்குப்பம் அருகில் புதிய 800 கி.வோ கோபுர மின் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதால், செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 10) முதல் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 15) வரையில் மாலை 3 மணி முதல் 6 மணி வரையில் திம்மாம்பேட்டை, நாராயணபுரம், அலசந்தாபுரம், புல்லூர், சிக்கணாங்குப்பம், ஆவாரங்குப்பம், ராமநாயக்கன்பேட்டை, தெக்குப்பட்டு, தும்பேரி, வெலதிகாமணிபெண்டா ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.