கோயிலில் ஆன்மிக ஜோதி ஏற்றல்
உலக அமைதி வேண்டி,மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இளைஞர் அணி சார்பில், ஆன்மிக ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி குடியாத்தம் கெங்கையம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உலக அமைதி வேண்டி,மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இளைஞர் அணி சார்பில், ஆன்மிக ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி குடியாத்தம் கெங்கையம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட இளைஞர் அணித் தலைவர் கே.எஸ்.ஜெயவேல் தலைமை வகித்தார். குடியாத்தம், காட்பாடி, அணைக்கட்டு, பேர்ணாம்பட்டு, ஒடுகத்தூர், பள்ளிகொண்டா, கே.வி.குப்பம் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் அன்ன தானம் வழங்கப்பட்டது.
இதில் கெங்கையம்மன் கோயில் தர்மகர்த்தாஆர்.ஜி.சம்பத், நிர்வாகிகள் ஆர்.ஜி.கார்த்திகேயன், வி.பிரதீஷ், டி.ஜி.வெங்கடேசன், தரணி, தண்டபாணி, சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.