வேலூர்

"அம்மா' திட்ட முகாம்: 45 பேருக்கு நலத்திட்ட உதவி

DIN

வாலாஜாபேட்டை வட்டம், கல்லாங்குப்பம் கிராமத்தில் "அம்மா' திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு வாலாஜாபேட்டை வட்ட சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் ராஜசேகரன் தலைமை வகித்தார். மண்டலத் துணை வட்டாட்சியர் மதி வரவேற்றார்.
இதில், 45 மனுக்கள் வரப்பெற்றன. அனைத்து மனுக்கள் மீதும் உடனடி தீர்வு காணப்பட்டு அதற்கான சான்றுகள் வழங்கப்பட்டன.
முகாமில், தோட்டக்கலைத் துறை அலுவலர் வாசு, கால்நடை மருத்துவர் சத்யா, பல் மருத்துவர் நவீன், வாலாஜாபேட்டை வட்ட வழங்கல் அலுவலர் ஜெயபிரகாஷ், சோளிங்கர் வருவாய் ஆய்வாளர் கௌரிசங்கர், கிராம நிர்வாக அலுவலர்கள் கிருஷ்மூர்த்தி, சானு, யுவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT