சாலை மறியல்: ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் கைது
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் 125 பேரை போலீஸார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் 125 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், ஊரக செயலர்களுக்கு பதிவுறு எழுத்தர்களுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும், உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், தேர்தல் நேரங்களில் ஆய்வுக் கூடம், விடுமுறை நாள்களில் களப்பணி செய்வதை நிரந்தரமாகத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 3-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், 6-ஆம் நாளான திங்கள்கிழமை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜோசப் கென்னடி, மாநிலச் செயலர் பாரி ஆகியோர் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, கோஷங்கள் எழுப்பியடி தடையை மீறி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் 125 பேரை போலீஸார் கைது செய்தனர்.