வேலூர்

பைக்குகள் மோதல்: இளைஞர் சாவு

DIN

அரக்கோணம் அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த மணவூரைச் சேர்ந்தவர் ஆபேல் (27). 
இவர், திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கத்தில் இருந்து பைக்கில் தக்கோலம் நோக்கி ஞாயிற்றுக்கிழமை வந்து கொண்டிருந்தார். 
அப்போது எதிரே வந்த சீதாராமனின் (35) பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் அரக்கோணம் அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு ஆபேல் உயிரிழந்தார்.
சீதாராமன், சென்னை அரசினர் பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.  
இதுகுறித்து தக்கோலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருமுட்டையைப் பாதுகாத்து வைத்த பிரபல நடிகை!

கடனை செலுத்திவிட்டு மனைவியை அழைத்துச் செல்: தனியார் வங்கி அட்டூழியம்

உலகக் கோப்பையில் வேறு மாதிரி விளையாடுவார்: ஹார்திக் பாண்டியாவுக்கு ஆதரவளித்த கவாஸ்கர்!

கனவு, காலம்.. காவ்யா!

போர் நிறுத்தம், பிணைக்கைதிகள் விடுதலை: பிளிங்கன் பயணம் உதவுமா?

SCROLL FOR NEXT