100 சதவீதம் வரிவசூல்: ஆலங்காயம் பேரூராட்சி சாதனை
ஆலங்காயம் சிறப்பு நிலை பேரூராட்சியில் 2017-18 நிதியாண்டிற்கான பேரூராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய வரிகள் 100 சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
ஆலங்காயம் சிறப்பு நிலை பேரூராட்சியில் 2017-18 நிதியாண்டிற்கான பேரூராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய வரிகள் 100 சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் திருஞானம் உத்தரவின் பேரில், ஆலங்காயம் சிறப்பு நிலை பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் செயல் அலுவலர் ர.ஆனந்தன் தலைமையில் அலுவலர்கள், பணியாளர்கள் தீவிர வரிவசூல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதன்படி, 2017-18 நிதியாண்டிற்கான பேரூராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் உள்ளிட்ட அனைத்து வரிகளையும் 100 சதவீதம் வசூல் செய்தனர்.
100 சதவீதம் வரிவசூல் செய்தமைக்காக செயல் அலுவலர் ஆனந்தன், பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோரை வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் திருஞானம் பாராட்டினர்.