ஆம்பூர் அருகே நாய்களால் கடிபட்ட மான் மீட்பு
ஆம்பூர் அருகே நாய்களால் விரட்டிக் கடிக்கப்பட்ட மானை பொதுமக்கள் திங்கள்கிழமை மீட்டனர்.
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM
ஆம்பூர் அருகே நாய்களால் விரட்டிக் கடிக்கப்பட்ட மானை பொதுமக்கள் திங்கள்கிழமை மீட்டனர்.
ஆம்பூர் அருகே பச்சகுப்பம் கிராமத்தருகே உள்ள சாணாங்குப்பம் காப்புக் காட்டிலிருந்த்து, மான் ஒன்று வழி தவறி பச்சகுப்பம் கிராமத்துக்கு வந்தது.
அதனை தெரு நாய்கள் விரட்டிக் கடித்துள்ளன. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் நாய்களை விரட்டிவிட்டு, மானை மீட்டனர். தகவலறிந்த ஆம்பூர் வனத் துறையினர் மானுக்கு, சிகிச்சை அளித்து, வனத்துக்குள் விட்டனர்.