ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞர் சாவு
ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழந்தார்.வாணியம்பாடி, தர்ஜித்பேட்டையைச் சேர்ந்தவர் பொன்னுவேல் (36). இரு
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM
ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழந்தார்.
வாணியம்பாடி, தர்ஜித்பேட்டையைச் சேர்ந்தவர் பொன்னுவேல் (36). இரு நாள்களுக்கு முன் பெங்களூரு சென்ற பொன்னுவேல், திங்கள்கிழமை காலை பெங்களூருவிலிருந்து ஜோலார்பேட்டைக்கு திருப்பதி விரைவு ரயிலில் பயணம் செய்தார். ஜோலார்பேட்டைக்கு ரயில் நிலைய நடைமேடையில் வந்தபோது, தவறி விழுந்த பொன்னுவேல், ரயில் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார், பொன்னுவேலின் சடலத்தை மீட்டு, திருப்பத்துôர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.