வேலூர்

சாரம் விழுந்து  தொழிலாளி சாவு

DIN

ஆற்காடு அருகே கட்டுமானப் பணியின்போது சாரம் விழுந்து தொழிலாளி இறந்தார்.
ஆற்காட்டை அடுத்த கத்தியவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (35). கட்டடத் தொழிலாளியான இவர், வெள்ளிக்கிழமை விளாபாக்கம் பகுதியில் வீடு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு கட்டப்பட்டிருந்த சாரம் திடீரென அறுந்து விழுந்தது. இதில், கீழே தவறி விழுந்த பாஸ்கர் பலத்த காயமடைந்தார். 
அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு, ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், பாஸ்கரன் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். 
இதுகுறித்து திமிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT