வேலூர்

மர்மக் காய்ச்சல்: கணவன், மனைவி சாவு

DIN

குடியாத்தம் அருகே மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கணவன், மனைவி இருவரும் உயிரிழந்தனர்.
குடியாத்தத்தை அடுத்த மூங்கப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நகைத் தொழிலாளி டி. அரி (33). இவரது மனைவி ரோஜா(27). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் கடந்த சில நாள்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனராம். 
இந்நிலையில், தீவிர சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். 
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அக்கிராமத்தில் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்பாக்கம்: கார் விபத்தில் 5 இளைஞர்கள் பலி

தில்லியில் மட்டும் ’க்யூட்-யுஜி’ தேர்வு ஒத்திவைப்பு!

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை இன்று ரத்து!

முகூா்த்தம், வார விடுமுறை: 1,875 கூடுதல் பேருந்துகள் இயக்கம்

விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

SCROLL FOR NEXT