அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
பேர்ணாம்பட்டு அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
பேர்ணாம்பட்டு அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
பேர்ணாம்பட்டு அம்பேத்கர் நகரில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் பேர்ணாம்பட்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவரின் இடது கையில் ரவிகஸ்தூரி என்ற பெயர் பச்சை குத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து இறந்தவர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.