மணல் கடத்தல்: 3 லாரிகள் பறிமுதல்; 2 பேர் கைது
ஆற்காடு பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட 3 லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
ஆற்காடு பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட 3 லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
ஆற்காடு பாலாற்றுப் பகுதியில் மணல் கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில், ஆற்காடு கிராமிய போலீஸார் அப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 3 டிப்பர் லாரிகளை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அதில், எசையனூர் பாலாற்றிலிருந்து திருட்டுத்தனமாக மணல் எடுத்து செல்வது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து 3 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர்.
மேலும், லாரியை ஓட்டி வந்த மல்லிகாபுரம் பகுதியைச் சேர்ந்த அருள் (28), எசையனூர் பகுதியைச் சேர்ந்த தனசேகர் (23) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், தப்பிச் சென்ற கார்த்தி என்பவரை தேடி வருகின்றனர்.