வேலூர்

வியாபாரி வீட்டில் ரூ. 10 பவுன் நகை திருட்டு

DIN

காட்பாடியில் வியாபாரியின் வீட்டில் 10.5 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
காட்பாடி சோலை நகர் 3-ஆவது தெருவைச் சேர்ந்தவர் சங்கர் (60). இவர், காட்பாடி காவல் நிலையம் எதிரே எலெக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக சங்கர் குடும்பத்துடன் பெங்களூர் 
சென்றிருந்தார். 
செவ்வாய்க்கிழமை திரும்பி வந்துபார்த்த போது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10.5 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. 
இதுகுறித்த புகாரின் பேரில் காட்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலை கேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்ஸா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT