வேலூர்

இரு பேருந்துகள் மோதல்: 10  பேர் காயம்

DIN

ஆற்காடு அருகே இரு அரசுப் பேருந்துகள் மோதிய விபத்தில் 10 பேர் காயமடைந்தனர்.
சென்னையிலிருந்து பெங்களூருக்கு அரசுப் பேருந்து திங்கள்கிழமை சென்றுகொண்டிருந்தது. பேருந்தை நெமிலி அருகேயுள்ள மகேந்திரவாடி கிராமத்தைச் சேர்ந்த துரைராஜ் (40) ஓட்டிச் சென்றார். மேல்விஷாரம் தனியார் மருத்துவமனை அருகே சென்றபோது, பின்னால் சென்னையிலிருந்து ஒசூர் சென்ற அரசுப் பேருந்து மோதியது. இதில், பேருந்து நடத்துநர் முனுசாமி (35), பயணிகள் வேலூர் கத்தாழம்பட்டு பகுதியைச் சேர்ந்த அஜித் (22), சென்னை வடபழனியைச் சேர்ந்த சுந்தர் (40), பெங்களூரைச் சேர்ந்த சரவணன் (44) உள்ளிட்ட 10 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து ஆற்காடு நகர போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT