ஆம்பூர் அருகே கோயில் வளாகத்தில் தூங்கிய பக்தரிடம் இருந்து செல்லிடப்பேசி புதன்கிழமை திருட்டுபோனது.
கோவையைச் சேர்ந்த மோகன் மற்றும் சிலர் 3 கார்களில் திருப்பதிக்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பினர். ஆம்பூர் அருகே வீரவர் கோயில் பகுதி திரௌபதி அம்மன் கோயிலில் இரவு தங்கினர். காலையில் எழுந்து பார்த்தபோது மோகனின் விலைமதிப்புள்ள செல்லிடப்பேசி திருட்டு போயிருந்தது தெரியவந்தது. கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைப் பார்த்தபோது அதிகாலையில் ஒரு நபர் மோகனின் அருகேயிருந்த அவருடைய செல்லிடப்பேசியை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஆம்பூர் கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.