வேலூர்

மரத்தில் வேன் மோதி மீன் வியாபாரி சாவு

DIN

மரத்தில் வேன் மோதியதில் மீன் வியாபாரி உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியைச் சேர்ந்தவர் பாஷா(26). மீன் வியாபாரம் செய்துவந்தார். அவரது தாயார் அபிசா(52).  இவர்கள்  இருவரும்  புதன்கிழமை இரவு தங்களுக்கு சொந்தமான வேனில் வேலூர் சென்றுவிட்டு வந்தவாசி திரும்பிக் கொண்டிருந்தனர். ஆற்காடு-திண்டிவனம் சாலையில் அரும்பாக்கம் இணைப்புச் சாலை அருகே வந்தபோது அவர்களது வேன் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதியது. 
இதில் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு ஆற்காடு அரசு மருத்துவனையில்  சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் பாஷா ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் கலவை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT