ஆம்பூரில் ஜமாபந்தி நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த வட்டத்திற்கான ஜமாபந்தி நிறைவு விழாவுக்கு வருவாய்த் தீர்ப்பாய அலுவலரும், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியருமான அ.காமராஜ் தலைமை வகித்தார். ஆம்பூர் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். 128 பயனாளிகளுக்கு ரூ.13.61 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
வட்டாட்சியர் சுஜாதா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் முரளி, திமுக மாதனூர் ஒன்றியச் செயலாளர் அகரம்சேரி சுரேஷ்குமார், அக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன், ஆசிரியர் குணசேகரன், நுகர்வோர் பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் குணசீலன், ரத்தினசாமி, விவசாய சங்கப் பிரதிநிதி ஏகநாதன், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.