வேலூர்

நெற்பயிரை சேதப்படுத்திய காட்டுப் பன்றிகள்

DIN


ஆம்பூர் அருகே நெற்பயிர்களை காட்டுப் பன்றிகள் வெள்ளிக்கிழமை இரவு சேதப்படுத்திச் சென்றன.
ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சிக்கு உள்பட்ட பைரப்பள்ளியைச் சேர்ந்தவர் விவசாயி துரை (60). இவரது நிலத்தில் நெல், வாழை பயிரிடப்பட்டுள்ளன. வனப்பகுதி எல்லையோரம் விவசாய நிலம் அமைந்துள்ளது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வனப்பகுதியில் இருந்த வந்த காட்டுப் பன்றிகள் விவசாய நிலத்துக்குள் புகுந்து அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்களை சேதப்படுத்திவிட்டுச் சென்றன.
தகவலறிந்த ஆம்பூர் வனத் துறையினர் அங்கு சென்று பார்வையிட்டனர். மேலும், காட்டுப் பன்றிகள் விவசாய நிலத்துக்கு வராமல் தடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாக தெரிவித்தனர். 
காட்டுப் பன்றிகளால் சேதமடைந்த நெற்பயிருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயி துரை கோரிக்கை விடுத்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலிடம்: தெற்கு ரயில்வே

கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள் கைது!

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT