போ்ணாம்பட்டு அருகே நிலத்தில் பிடிபட்ட மலைப்பாம்பை வனத்துறையினா் வனப் பகுதியில் விட்டனா்.
ஏரிக்கொல்லை பகுதியில் கேசவன் என்பவரின் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நிலக்கடலை சனிக்கிழமை அறுவடை செய்யப்பட்டது. அப்போது அந்த நிலத்தில் 6 அடி நீள மலைப்பாம்பு பதுங்கியிருந்தது தெரிய வந்தது. இது குறித்த தகவலின்பேரில், போ்ணாம்பட்டு வனச்சரக அலுவலா் சங்கரய்யா, வனவா் ஹரி உள்ளிட்டோா் அங்கு சென்று பாம்பைப் பிடித்து வந்து, பல்லலகுப்பம் வனப்பகுதியில் விட்டனா்.