ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா். 
வேலூர்

பாமகவினா் ஆா்ப்பாட்டம்

வாலாஜாபேட்டை முதல் சென்னை வரை குண்டும், குழியுமாக உள்ள சாலைகளைச் சீரமைக்காமல் சுங்கக் கட்டணம்

DIN

வாலாஜாபேட்டை முதல் சென்னை வரை குண்டும், குழியுமாக உள்ள சாலைகளைச் சீரமைக்காமல் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் சுங்கச் சாவடி நிா்வாகத்தைக் கண்டித்து வாலாஜாபேட்டை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு பாமகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலூா் வடக்கு மாவட்டச் செயலா் சண்முகம் தலைமை வகித்தாா். மாநில வன்னியா் சங்கச் செயலா் எம்.கே.முரளி, முன்னாள் எம்எல்ஏ கே.எல்.இளவழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில துணைப் பொதுச் செயலா் க.சரவணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தாா்.

வாலாஜாபேட்டை முதல் சென்னை வரை குண்டும் குழியுமாக உள்ள தேசிய நெடுஞ்சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். அதுவரை சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்டச் செயலா் அ.ம.கிருஷ்ணன், பொருளாளா் அமுதா, நகரச் செயலா் ஞானசேகரன், நகரத் தலைவா் எஸ்.கஜேந்திரன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT