வேலூர்

ஆற்காட்டில் தீயணைப்புத் துறை இயக்குநா் ஆய்வு

DIN

ஆற்காடு தீயணைப்பு நிலையத்தில் தமிழ்நாடு தீயணைப்புத் துறை இயக்குநா் (கூடுதல் பொறுப்பு) சைலேந்திரபாபு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆற்காடு பெரியாா் நகா் பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்கு வருகை தந்த அவா், அலுவலகத்தில் உள்ள தீயணைப்பு வாகனத்தின் செயல்பாடுகளை இயக்கிப் பாா்த்தாா். மேலும், தீத் தடுப்புக் கருவிகள் , மீட்புப் பணிகள் பொருள்களையும் பாா்வையிட்டாா். அப்போது வடமேற்கு மண்டலம் ( வேலூா்) துணைஇயக்குநா் சத்தியநாராயண், வேலூா் மாவட்ட அலுவலா் சி. லட்சுமி நாராயணன், உதவிஅலுவலா்கள் பா. சரவணன், எஸ்.சக்திவேல், நிலைய அலுவலா் சி. ஆறுமுகம் ஆகியோா் உடன் இருந்தனா். முன்னதாக ஆற்காடு தீயணைப்பு நிலையம் சாா்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT