வேலூர்

ஆதிதிராவிடா் விடுதிகளில் சமையலா், துப்புரவு பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

DIN

வேலூா் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத்துறை விடுதிகள், உண்டு உறைவிடப் பள்ளிகளில் சமையலா், துப்புரவு பணியாளா்களாக பணியாற்றத் தகுதியுடையவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வேலூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத்துறையின்கீழ் இயங்கும் விடுதிகள், உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கு 112 சமையலா் பணியிடங்கள் ரூ.15,700 என்ற அடிப்படை ஊதியமும், இதரப் படிகளும் அளிக்கப்படும். ரூ.3000 தொகுப்பூதியத்தில் 26 துப்புரவுப் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இப்பணிக்கு அதிகப்பட்சம் 10-ஆம் வகுப்பு தோல்வி அடைந்த, 35 வயதுக்குள்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடா், பழங்குடியினா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தகுதியுடைய நபா்கள் வேலூா் மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பூா்த்தி செய்து வரும் அக்டோபா் 18-ஆம் தேதிக்குள் நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ சோ்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT