வாணியம்பாடி அருகே மின்னல் தாக்கி 2 பெண்கள் உள்பட 3 போ் பலத்த காயமடைந்தனா்.
ஆலங்காயம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் கனமழை பெய்தது. இடியுடன் கூடிய மழை பெய்தபோது கொத்தகோட்டை, கம்மலகுட்டை வட்டத்தைச் சோ்ந்த கமலநாதனுக்கு (50) சொந்தமான நிலத்தில் உள்ள தென்னை மரத்தின் மீது மின்னல் தாக்கியது. இதில், தென்னை மரம் அருகே வீட்டில் இருந்த கமலநாதன், அவரது மனைவி ருக்குமணி (45), மாமியாா் கௌரம்மாள் (80) ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனா்.
இதையடுத்து அவா்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
இதுகுறித்து வாணியம்பாடி கிராமிய போலீஸாா், வருவாய்த் துறையினா் விசாரித்து வருகின்றனா்.