வேலூர்

ஏலகிரி படகு குழாம் ரூ. 1.15 கோடிக்கு ஏலம்

DIN

ஏலகிரி மலையில் உள்ள படகு குழாம் ரூ. 1 கோடியே 15 லட்சத்து 42 ஆயிரத்துக்கு ஏலம் விடப்பட்டது.

வேலூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ஒன்றியத்திற்குள்பட்ட சுற்றுலா மையமான ஏலகிரியில் ஆண்டுதோறும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் கோடை விழா நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

மேலும் ஏலகிரி மலையில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் படகு குழாம் மற்றும் அதையொட்டி இயற்கைப் பூங்காவும் அமைந்துள்ளது.

இந்த படகு குழாம் ஆண்டுக்கு ஒரு முறை ஜோலாா்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஏலம் விடப்படும்.

இந்நிலையில், நடப்பு 2019-20 ஆண்டிற்கான ஏலம் வியாழக்கிழமை ஜோலாா்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் ருத்ரப்பா தலைமையில் நடைபெற்றது.

இந்த ஏலத்தில், படகு குழாம், அதனுள் அடங்கிய வணிகவளாகம், கேண்டீன், நுழைவு கட்டணம், மீன் மகசூல் என தனித்தனியே ஏலம் விடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT