வேலூர்

மருத்துவமனை ஊழியர் வீட்டில் நகை திருட்டு

DIN

வேலூர் அருகே மருத்துவமனை ஊழியர் வீட்டில் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். 
காட்பாடி விருதம்பட்டு பால் நகரைச் சேர்ந்தவர் சாமுவேல் (53). இவர் தனியார் மருத்துவமனையில் உதவியாளராகப் பணியாற்றுகிறார். இவரது மனைவி கிரேசி மில்டன், வேலூர் தனியார் மருத்துவமனையில் கண் பரிசோதனை நிபுணராக உள்ளார். 
புதன்கிழமை இரவு கிரேசிமில்டன், அவரது மகன் ஆகியோர் வீட்டிலுள்ள ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தனராம். காலையில் எழுந்த பார்த்தபோது, மற்றொரு அறையில் உள்ள பீரோவில் இருந்த 3 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. 
இதுகுறித்து விருதம்பட்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

SCROLL FOR NEXT