பேர்ணாம்பட்டை அடுத்த கொத்தபல்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 88 பயனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமிற்கு மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் அ. காமராஜ் தலைமை வகித்தார். வட்டாட்சியர் செண்பகவள்ளி வரவேற்றார். எம்எல்ஏ எஸ். காத்தவராயன் 88 பயனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கினார்.
இதில் மண்டலத் துணை வட்டாட்சியர்கள் பழனி, வடிவேல், வருவாய் ஆய்வாளர் ரகுராம், கிராம நிர்வாக அலுவலர் முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.