வேலூர்

பள்ளியில் முப்பெரும் விழா

DIN


வாணியம்பாடி அடுத்த மேட்டுபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மரக்கன்று நடு விழா, கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக ஆசிரியைக்கு ஊதியம் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமையாசிரியர் தா.சந்திரசேகரன் தலைமை வகித்தார். ஆசிரியர் சரவணன் வரவேற்றார். 
மாணவர்களுக்கு புத்தகப்பை உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நியமிக்கப்பட்ட ஆசிரியைக்கான சம்பளம் வழங்குதல் ஆகியவற்றை வாணியம்பாடி ரோர்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் அதன் தலைவர் ஸ்ரீநிவாசலு, மண்டல ஒருங்கிணைப்பாளர் பிரதாப் ஆகியோர் வழங்கினர்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் குமரேசன், பிரசாந்த், பிரவீண், முன்னாள் கல்விக்குழுத் தலைவர் கவிதா, இளங்கோவன், பள்ளி ஆசிரியைகள் நவீனா, ஜீவிதா ஆகியோர் பங்கேற்றனர். உதவித் தலைமையாசிரியர் சக்திவேல் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

SCROLL FOR NEXT