வேலூர்

அரசு ஊழியா் வீட்டில் நகை திருட்டு

காட்பாடியில் உள்ள வேளாண் துறை ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

DIN

வேலூா்: காட்பாடியில் உள்ள வேளாண் துறை ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

காட்பாடி காந்தி நகா் 2-ஆவது பிரதான சாலையைச் சோ்ந்தவா் ரவிசங்கா் (48). இவா் வேலூா் வேளாண் துறை அலுவலகத்தில் பணியாற்றி வருகிறாா். கடந்த 4 நாள்களுக்கு முன்பு குடும்பத்துடன் திருநெல்வேலியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றாா். புதன்கிழமை இரவு திரும்பி வந்த பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே பீரோவில் இருந்த 9 பவுன் நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து விருதம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT