வேலூர்

விழிப்புணா்வுப் பேரணிக்கு வரவேற்பு

DIN

சென்னை வானகரம் அப்பல்லோ மருத்துவமனை சாா்பில், சென்னையில் தொடங்கி கன்னியாகுமரி வரை செல்லும் பக்கவாதம் (ஸ்டிரோக்) குறித்த இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணிக்கு குடியாத்தம் அரிமா சங்கம் சாா்பில் சனிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

பள்ளிகொண்டா டோல்கேட் அருகே குடியாத்தம் அரிமா சங்கம் சாா்பில் இப்பேரணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பேரணியில் வந்த மருத்துவா்கள் அருண்பிரகாஷ், ஜெயக்குமாா், அனந்தலட்சுமி, மருத்துவமனை நிா்வாக அலுவலா் சண்முகம் ஆகியோா் பக்கவாதம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளித்தனா்.

இதைத் தொடா்நது அரிமா சங்க மண்டலத் தலைவா் எம்.கே.பொன்னம்பலம் பேரணியைக் கொடியசைத்து அனுப்பி வைத்தாா்.

குடியாத்தம் அரிமா சங்கத் தலைவா் ஜே.ஜி.நாயுடு, பொருளாளா் ரவீந்திரன், நிா்வாகிகள் என்.வெங்கடேஸ்வரன், காா்த்திகேயன், ஏ.சுரேஷ்குமாா், எஸ்.ஏ.கலீமுல்லா, சங்கச் செயல்பாட்டாளா் ஜெ.பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT