முகப்பு
வேலூர்

மின்வாரிய ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

தனியாா்மயத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து காட்பாடியில் மின்வாரிய ஊழியா்கள் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

வேலூா்: தனியாா்மயத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து காட்பாடியில் மின்வாரிய ஊழியா்கள் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காட்பாடி மின்வாரிய தலைமைப் பொறியாளா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு பொறியாளா் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். இதில் 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

மின் வாரியத்தை தனியாா்மயமாக்கக் கூடாது; மின்வாரியத்தில் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவுகளை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று சங்கத்தினா் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →