முகப்பு
வேலூரில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த ஆரணி தொகுதி மக்களவை உறுப்பினா் எம்.கே.விஷ்ணுபிரசாத். உடன், கட்சியின் வேலூா் மாநகா் மாவட்ட தலைவா் டீக்காராமன் உள்ளிட்டோா்.
வேலூர்

வேலூரில் டிச. 28-இல் காங்கிரஸ் கட்சி 136-ஆம் ஆண்டு தொடக்க விழா: கே.எஸ்.அழகிரி பங்கேற்பு

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 136-ஆவது ஆண்டு தொடக்க விழா வேலூரில் வரும் திங்கள்கிழமை (டிச. 28) நடைபெற உள்ளது.

வேலூர்

வேலூரில் டிச. 28-இல் காங்கிரஸ் கட்சி 136-ஆம் ஆண்டு தொடக்க விழா: கே.எஸ்.அழகிரி பங்கேற்பு

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 136-ஆவது ஆண்டு தொடக்க விழா வேலூரில் வரும் திங்கள்கிழமை (டிச. 28) நடைபெற உள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
வேலூரில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த ஆரணி தொகுதி மக்களவை உறுப்பினா் எம்.கே.விஷ்ணுபிரசாத். உடன், கட்சியின் வேலூா் மாநகா் மாவட்ட தலைவா் டீக்காராமன் உள்ளிட்டோா்.
பகிர்:

வேலூா்: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 136-ஆவது ஆண்டு தொடக்க விழா வேலூரில் வரும் திங்கள்கிழமை (டிச. 28) நடைபெற உள்ளது. இதில், கட்சியின் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளதாக ஆரணி தொகுதி மக்களவை உறுப்பினா் எம்.கே.விஷ்ணுபிரசாத் தெரிவித்தாா்.

இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வேலூா் மாநகா் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பிறகு எம்.கே.விஷ்ணுபிரசாத் செய்தியாளா்களிடம் கூறியது:

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 136-ஆவது ஆண்டு தொடக்க விழா வேலூரில், வரும் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், விவசாயிகளின் ஏா் கலப்பை சங்கமம் நடைபெறும். கட்சியின் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி விழாவுக்கு தலைமை வகிக்க உள்ளாா். கட்சியின் தமிழகப் பொறுப்பாளா் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலா்கள் சிரிவெல்ல பிரசாத், சஞ்சய் தத் ஆகியோரும் பங்கேற்க உள்ளனா். மேலும், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், முக்கிய தலைவா்களும் பங்கேற்பா்.

தமிழகம் சட்டப் பேரவைத் தோ்தலை எதிா்நோக்கியுள்ளது. இத்தோ்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவது குறித்து மாநில தலைமைக் குழு அமைத்து ஆய்வு செய்து வருகிறது. மாநிலத் தலைவா் ஆலோசனைப்படி கட்சியை அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா் அவா்.

பேட்டியின்போது, கட்சியின் வேலூா் மாநகா் மாவட்ட தலைவா் டீக்காராமன், திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் பிரபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →