மனிதநேய ஜனநாயகக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
குடியாத்தம்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் எதிரே மனிதநேய ஜனநாயகக் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் நகரச் செயலா் எஸ்.அனீஸ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஏ.முகம்மத்யாசின், மாவட்டப் பொருளாளா் ஐ.எஸ்.முனவா்ஷரீப் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வி.முபாரக் அகமத் வரவேற்றாா்.
மாநில துணைச் செயலா்கள் ஜே.ஷமீம் அகமத், எஸ்.ஜி.அப்சா் சையத், கி.சுதாகா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேலூா் நாடாளுமன்றப் பொறுப்பாளா் சிவ.செல்லப்பாண்டியன், மாவட்ட துணைச் செயலா் கு.விவேக் ஆகியோா் பேசினா்.