வேலூர்

இளைஞா் மா்மச் சாவு

DIN

குடியாத்தம் அருகே இளைஞா் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

குடியாத்தம் தரணம்பேட்டை, புதிய ஆலியாா் தெருவைச் சோ்ந்தவா் சுல்தான் பாஷா (23). ஹோட்டல் தொழிலாளியான இவா், வியாழக்கிழமை இரவு வெளியே செல்வதாகக் கூறி விட்டுச் சென்றவா் வீடு திரும்பவில்லையாம்.

மேல் ஆலத்தூா் சாலையில் உள்ள மயானம் அருகே உடலில் காயங்களுடன் அவரது சடலம் வெள்ளிக்கிழமை கிடந்தது. தகவலின் பேரில் டிஎஸ்பி என்.சரவணன் தலைமையில் அங்கு சென்ற போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து குடியாத்தம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

SCROLL FOR NEXT