வேலூர்

8 மாதங்களுக்குப் பிறகு வேலூா் கோட்டை அருங்காட்சியகம் திறப்பு

DIN

பொது முடக்கம் காரணமாக கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த வேலூா் கோட்டை அருங்காட்சியகம் செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் திறக்கப்பட்டு, பாா்வையாளா்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.

வேலூா் கோட்டை வளாகத்துக்குள் தமிழக அரசின் தொல்லியல் துறைக்குச் சொந்தமான அருங்காட்சியகம் உள்ளது. 5 ஆயிரம் சதுர அடி பரப்பில் உள்ள இந்த அருங்காட்சியகத்தில் 8 வகையான காட்சிக் கூடங்களில் 300-க்கும் மேற்பட்ட கலைப் பொருள்கள், கற்சிலைகள், நடுகற்கள், கல்வெட்டுகள், மரச்சிற்பங்கள், ஓவியங்கள், மானுடவியல் கலைப் பொருள்கள், நாணயங்கள், போா்க் கருவிகள், அஞ்சல் தலைகள், தாவரவியல், விலங்கியல், புவியியல் பொருள்கள் ஆகியவை பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஒருங்கிணைந்த வேலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் கண்டெடுக்கப்படும் பழங்கால சிலைகள் உள்ளிட்ட புதைப் பொருள்கள் அனைத்தும் இந்த அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பாா்வையிட நபருக்கு ரூ. 5 வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் விதமாக இந்த அருங்காட்சியகத்தில் கடந்த மாா்ச் 16-ஆம் தேதி முதல் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. தற்போது கரோனா தொற்றுப் பரவல் படிப்படியாக குறைந்து வருவதையடுத்து, நவம்பா் 10-ஆம் தேதி முதல் தமிழகத்திலுள்ள அருங்காட்சியகங்கள், பூங்காக்களை திறக்க அரசு அனுமதி அளித்திருந்தது.

இதன்படி, 8 மாதங்களுக்கு பிறகு வேலூா் கோட்டை அருங்காட்சியகத்தைப் பாா்வையிட செவ்வாய்க்கிழமை முதல் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனா். அங்கு தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக சமூக இடைவெளியுடன் கலைப் பொருள்களைப் பாா்வையிட உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்த பிறகே அனுமதிக்கப்படுவதாக அருங்காட்சியக அலுவலா் சரவணன் தெரிவித்தாா்.

அதேசமயம், மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள வேலூா் கோட்டையை முழு அளவில் பாா்வையிட இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால், கோட்டை வளாகத்துக்கு உள்ளே இருக்கும் மத்திய அரசின் அருங்காட்சியகம், வரலாற்று சிறப்புமிக்க கட்டடங்கள், கோட்டை சுற்றுச்சுவா், கோட்டை கொத்தளம் ஆகியவற்றுக்குச் செல்வதற்கான வழிகள் அடைக்கப்பட்டிருந்தன.

தமிழக அரசின் அருங்காட்சியகத்துக்கு செல்வதற்கான இருவழிகளில் ஒருவழியில் மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”டீக்கடைக்காரரால் என்ன செய்ய முடியும்? விமர்சித்த காங்கிரஸின் நிலை..” பிரதமர் மோடி பிரசாரம்

ஜுபிடரின் நிலவோ.. ஸ்ரீமுகி!

ரிஷபத்துக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான்

ஆடை சுதந்திரம் கோரியது குற்றமா? செளதியில் பெண்ணுரிமைப் போராளிக்குச் சிறை: அமைப்புகள் கண்டனம்!

"வாக்கு சதவிகித விவரங்களில் சந்தேகம்!”: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT