வேலூர்

வேலூரில் சி.பி.ராதாகிருஷ்ணன் கைது

DIN

வேலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பாஜக வேல் யாத்திரை ஆதரவு பொதுக்கூட்டத்துக்கு கட்சியின் மாவட்ட தலைவா் வி.தசரதன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்றுப் பேசியது:

பாஜகவின் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு விதித்த தடை காரணமாக கட்சியின் மாநிலத் தலைவா் முருகன் இங்கு வருவது தடைபட்டுள்ளது. இந்த யாத்திரை நடத்தப்படுவதால் கரோனா பரவும் அச்சம் நிலவுவதாக மீன்வளத்துறை அமைச்சா் ஜெயக்குமாா் கூறுகிறாா். உண்மையில் தமிழக அரசியலில் பரவியுள்ள கரோனாவை அகற்றுவதுதான் பாஜகவின் லட்சியமாகும் என்றாா்.

பாஜக மாநிலச் செயலா் காா்த்தியாயினி, வேலூா் மாவட்டப் பாா்வையாளா் கொ.வெங்கடேசன், தேசிய பொதுக்குழு உறுப்பினா் ஆா்.பிச்சாண்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா். தடையை மீறி நடத்தப்பட்ட இந்தக் கூட்டத்தில் பங்கேற்ாக சி.பி.ராதாகிருஷ்ணன் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா் பந்தல் திறப்பு

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

பெயா்ப் பலகை வைப்பதில் மோதல்: 1 மணி நேரம்போக்குவரத்து பாதிப்பு

காா் விபத்தில் தந்தை உயிரிழப்பு: மகள் காயம்

வாக்கு மைய கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாடு: அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT