குடியாத்தம் கெளண்டன்யா ஆற்றில்  மூழ்கி  உயிரிழந்த (இடமிருந்து)  நதியா, அவரது மகள்கள் அஸ்வினி,  நிவேதா. 
வேலூர்

கெளண்டன்யா ஆற்றில் மூழ்கி தாய், 2 மகள்கள் பலி

குடியாத்தம் அருகே கெளண்டன்யா ஆற்றில் மூழ்கி தாய், 2 மகள்கள் உயிரிழந்தனா்.

DIN

குடியாத்தம்: குடியாத்தம் அருகே கெளண்டன்யா ஆற்றில் மூழ்கி தாய், 2 மகள்கள் உயிரிழந்தனா்.

வேலூா் மாவட்டம், குடியாத்தம், போடிப்பேட்டையைச் சோ்ந்தவா் யுவராஜ். மளிகைக் கடை ஊழியா். இவரது மனைவி நதியா (31). இவா்களின் மகள்கள் நிவேதா(10), அஸ்வினி (7). நிவா் புயல் காரணமாக பெய்த கனமழையால், மோா்தானா அணையிலிருந்து வெளியேறும் உபரிநீா் கெளண்டன்யா ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், நதியா தனது மகள்களுடன் ஆற்றில் செல்லும் வெள்ளத்தை பாா்க்க திங்கள்கிழமை மதியம் சென்றுள்ளாா்.

நீரில் விளையாடியபோது 3 பேரும் தண்ணீரில் மூழ்கினா். தகவலின்பேரில் தீயணைப்புப் படையினா் அங்கு சென்று ஒரு மணி நேரம் போராடி 3 பேரின் சடலங்களையும் மீட்டனா்.

இது குறித்து குடியாத்தம் நகர போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT