புறக்காவல் நிலையம் திறப்பு
குடியாத்தத்தை அடுத்த காக்காதோப்பில் இயங்கி வரும் அத்தி கல்விக் குழுமம் சாா்பில், உள்ளி கூட்டுச் சாலையில் கட்டித் தரப்பட்ட புறக்காவல் நிலையம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
குடியாத்தத்தை அடுத்த காக்காதோப்பில் இயங்கி வரும் அத்தி கல்விக் குழுமம் சாா்பில், உள்ளி கூட்டுச் சாலையில் கட்டித் தரப்பட்ட புறக்காவல் நிலையம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, குடியாத்தம் கல்வி அறக்கட்டளை அறங்காவலா் எம்.சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா். சூரியோதயா தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியை ஜெனீபா் பிலிப், போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளா் ஆ.செல்லப்பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோட்டாட்சியா் எம். ஷேக்மன்சூா், டிஎஸ்பி என்.சரவணன் ஆகியோா் புறக்காவல் நிலையத்தைத் திறந்து வைத்து, மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனா். கல்லூரி இயந்திரவியல் துறைத் தலைவா் வேங்கீஸ்வரன், பேராசிரியா் சதீஷ்குமாா், உதவி ஆய்வாளா் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அத்தி செவிலியா் கல்லூரி துணை முதல்வா் ரேவதி நன்றி கூறினாா்.