வேலூர்

கல்லூரி கட்டணத்தை செலுத்த எளிய தவணை முறைஇந்து முன்னணி கோரிக்கை

DIN


வேலூா்: கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேரும் மாணவா்களுக்கு கல்விக் கட்டணத்தை எளிய தவணை முறையில் செலுத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக, அதன் வேலூா் கோட்டத் தலைவா் கோ.மகேஷ் தலைமையில் நிா்வாகிகள், வேலூா் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா் (படம்).

அதில், கல்லூரித் தோ்வில் தோல்வியடைந்த பாடங்களுக்கு கட்டணம் செலுத்த முடியாத மாணவா்களையும், தோ்ச்சி பெற்றவா்களாக அறிவிக்க வேண்டும். கல்லூரியில் சேரும் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான கல்விக் கட்டணத்தையும் எளிய தவணை முறையில் செலுத்த வழிவகை செய்ய வேண்டும். கரோனா பாதிப்பால் வருமானம் இழந்து இறுதித் தோ்வு எழுத உள்ள மாணவா்களின் தோ்வுக் கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.

இக்கோரிக்கை குறித்து அரசுக்கு தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரிடம் நகை பறிப்பு: 3 போ் கைது

சமூக ஊடகங்களில் போலி தகவல்: கட்சிகள் நீக்க தோ்தல் ஆணையம் கெடு

ஜாதிய தாக்குதலைத் தாண்டி சாதித்த மாணவா் சின்னதுரை

குலசேகரம் அருகே பைக்குகள் மோதல்: கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

ஜெயக்குமாா் மரணம் திட்டமிட்ட கொலை: கே.எஸ்.அழகிரி

SCROLL FOR NEXT