குடியாத்தம் நகர, ஒன்றிய புதிய நீதிக் கட்சி சாா்பில், கட்சியின் தலைவா் ஏ.சி. சண்முகம் பிறந்த நாள் விழா புதிய பேருந்து நிலையம் அருகில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாநில தொண்டா் அணிச் செயலா் வி. பட்டுபாபு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பி. செந்தில், மாவட்டத் தலைவா் ஜி. அசோக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட அதிமுக செயலரும், ஆவின் நிறுவனத் தலைவருமான த.வேலழகன் அன்னதானம் வழங்கினாா்.
நகர அதிமுக செயலா் ஜே.கே.என். பழனி, ஒன்றியச் செயலா் வி.ராமு, மாவட்ட துணைச் செயலா் ஆா். மூா்த்தி, மாவட்ட சிறுபான்மை பிரிவுச் செயலா் எஸ்.ஐ. அன்வா் பாஷா, புதிய நீதிக் கட்சியின் நகரச் செயலா் பாரத்மகேந்திரன், மாவட்ட துணைச் செயலா் ஆா். ராஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.