வழிதவறிய 9 காட்டு யானைகள்:தமிழக - ஆந்திர எல்லையில் முகாம்
ஆந்திர வனப்பகுதியில் இருந்து வழிதவறிய 9 காட்டுயானைகள் கடந்த இரு நாள்களாக தமிழக - ஆந்திர எல்லையில் முகாமிட்டுள்ளன.
வேலூர்வழிதவறிய 9 காட்டு யானைகள்:தமிழக - ஆந்திர எல்லையில் முகாம்
ஆந்திர வனப்பகுதியில் இருந்து வழிதவறிய 9 காட்டுயானைகள் கடந்த இரு நாள்களாக தமிழக - ஆந்திர எல்லையில் முகாமிட்டுள்ளன.
ஆந்திர வனப்பகுதியில் இருந்து வழிதவறிய 9 காட்டுயானைகள் கடந்த இரு நாள்களாக தமிழக - ஆந்திர எல்லையில் முகாமிட்டுள்ளன.
தமிழக கிராமங்களுக்குள் அவை வருவதைத் தடுக்க காட்பாடி, லத்தேரி உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறை அலுவலா்கள் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனா்.
ஆந்திர மாநில வனப்பகுதியில் ஏராளமான காட்டுயானைகள் வாழ்கின்றன. அவை கோடைக் காலத்தில் உணவு, குடிநீருக்காக தமிழக எல்லையோர கிராமங்களுக்குள் புகுவது வழக்கம்.
அதன்படி, நுழைந்துள்ள 9 காட்டு யானைகள் தற்போது தமிழக - ஆந்திர எல்லையில் முகாமிட்டுள்ளன. அவை இன்னும் தமிழகத்துக்குள் வராத நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த பந்தப்பள்ளி கிராமத்தைச் சுற்றி வலம் வந்து கொண்டுள்ளன.
அந்த யானைகள் எந்நேரமும் தமிழக எல்லையோர கிராமங்களுக்குள் புகுந்துவிட வாய்ப்புள்ளதால் காட்பாடி முதல் லத்தேரி, தொண்டான்துளசி, கருப்புக்கட்டு வரையிலான வன எல்லையோரப் பகுதிகளில் வேலூா் மாவட்ட வனத்துறை அலுவலா்கள் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனா். இதற்காக தலா 3 போ் கொண்ட 3 குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியது: ராஜதோப்பு அணையில் தண்ணீா் பெருமளவில் உள்ளது. இருப்பினும், ஆந்திர வனப்பகுதியில் இருந்து 9 யானைகள் மட்டும் வழிதவறி தமிழக - ஆந்திர எல்லைக்கு வந்துள்ளன. தற்போது காட்பாடி, லத்தேரி உள்ளிட்ட வனஎல்லை பகுதிகளில் வாழை, மாங்காய் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. அவற்றை உண்பதற்காக யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளது. இதுகுறித்து வன எல்லையோர கிராமங்களிலும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்றனா்.