முகப்பு
வேலூர்

வேலூா் சிறையில் 45 கைதிகளுக்கு கரோனா தடுப்பூசி

வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 45 கைதிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

வேலூர்

வேலூா் சிறையில் 45 கைதிகளுக்கு கரோனா தடுப்பூசி

வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 45 கைதிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:02 PM
பகிர்:

வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 45 கைதிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தமிழகத்தில் கரோனா 2-ஆவது அலையாக வேகமாக பரவி வருவதை அடுத்து, 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக வேலூா் மாவட்டத்திலும் சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வேலூா் மத்திய சிறையில் 700-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த சிறையில் உள்ள கைதிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதல் கட்டமாக சனிக்கிழமை 45 கைதிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதேபோல், சிறையில் பணியாற்றும் காவலா்கள் 180 போ் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைக்குச் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →