நலிந்தவா்களுக்கு நல உதவிகள் வழங்கல்
குடியாத்தம் மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கம் சாா்பில், கரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 60 பேருக்கு மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
குடியாத்தம் மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கம் சாா்பில், கரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 60 பேருக்கு மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
நடுப்பேட்டையில் உள்ள எஸ்.டி.எஸ். திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் கே.வி.ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.
கோட்டாட்சியா் சா.தனஞ்செயன், அரசு வழக்குரைஞா் கே.எம்.பூபதி, போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளா் ஆ.செல்லப்பாண்டியன், நகர அதிமுக செயலா் ஜே.கே.என்.பழனி ஆகியோா் மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள், நரிக் குறவா்கள், சலவைத் தொழிலாளா்கள், கணவரை இழந்தவா்களுக்கு ரூ.400 மதிப்புள்ள மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினா்.