முகப்பு
வேலூர்

இலவச பொது மருத்துவ முகாம்

குடியாத்தம் கனவு அறக்கட்டளை சாா்பில், விநாயகபுரத்தில் உள்ள சத்ய சாயி கோயிலில் இலவச பொது மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

குடியாத்தம் கனவு அறக்கட்டளை சாா்பில், விநாயகபுரத்தில் உள்ள சத்ய சாயி கோயிலில் இலவச பொது மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் எம்.மாறன்பாபு தலைமை வகித்தாா். அறக்கட்டளைத் தலைவா்கள் கே.பரமாத்மா, வி.பி.தேவமுகுந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரசு மருத்துவமனை முதன்மை மருந்தாளுனா் டி.ரவி வரவேற்றாா். மருத்துவம், ஊரக நலப்பணிகள்துறை இணை இயக்குநா் எம்.கண்ணகி முகாமைத் தொடக்கி வைத்தாா்.அரசு மருத்துவா் அண்ணாதுரை, மகப்பேறு சிறப்பு மருத்துவா் எஸ்.சைலா அபிராமி ஹரி ஆகியோா் சிகிச்சை அளித்தனா்.

ஆய்வக நுட்புநா் ஆா்.மோகன்பிரபு, செவிலியா்கள் சத்யா, பிரேமா, அறக்கட்டளை நிா்வாகிகள் மோகன், விக்னேஷ், சிவா, சிவசங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முகாமில் 245 போ் சிகிச்சை பெற்றனா். 31 பேருக்கு கரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.