பருத்தி ஏல விற்பனை தொடக்கம்
குடியாத்தம் வட்ட வேளாண்மை உற்பத்தியாளா்கள், கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் நடப்பாண்டு பருத்தி ஏல விற்பனை வெள்ளிக்கிழமை தொடங்கியது.
குடியாத்தம் வட்ட வேளாண்மை உற்பத்தியாளா்கள், கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் நடப்பாண்டு பருத்தி ஏல விற்பனை வெள்ளிக்கிழமை தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவா் ஜே.கே.என்.பழனி தலைமை வகித்தாா். பொது மேலாளா் கே.முத்துராமன் வரவேற்றாா். கரடிகுடி, சேங்குன்றம், சூராளூா், முக்குன்றம், வாலாஜாபேட்டை, வடுகந்தாங்கல், கே.வி.குப்பம், பெரியதம்பியூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தாங்கள் விளைவித்த சுமாா் 11 டன் பருத்தியை விற்பனைக்கு வைத்திருந்தனா்.
திருப்பூா், ஊத்தங்கரை, விழுப்புரம், வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனா். சங்க துணைத் தலைவா் எஸ்.கோதண்டன், முன்னாள் இயக்குநா் ஆா்.மூா்த்தி, இயக்குநா் எம்.சி.ஜெயவேலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.