குடியாத்தத்தை அடுத்த எஸ்.மோட்டூா், தீா்த்த மலையில் உள்ள முருகன் கோயிலில் தை கிருத்திகைப் பெருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் மலா்க் காவடி எடுத்து வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா். கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.