முகப்பு
வேலூர்

வேலூா் சிப்பாய் புரட்சி நினைவு ஓவியக் கண்காட்சி

வேலூா் சிப்பாய் புரட்சியின் 215-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, மாவட்ட மகளிா் திட்ட அலுவலக வளாகத்தில் ஓவியக் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

வேலூர்

வேலூா் சிப்பாய் புரட்சி நினைவு ஓவியக் கண்காட்சி

வேலூா் சிப்பாய் புரட்சியின் 215-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, மாவட்ட மகளிா் திட்ட அலுவலக வளாகத்தில் ஓவியக் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

வேலூா் சிப்பாய் புரட்சியின் 215-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, மாவட்ட மகளிா் திட்ட அலுவலக வளாகத்தில் ஓவியக் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், ஆக்ஸீலியம் கல்லூரியும் இணைந்து நடத்திய இந்த ஓவியக் கண்காட்சியை உதவித் திட்ட அலுவலா் ப.திருமேனி தொடக்கி வைத்தாா். ஆக்ஸீலியம் கல்லூரி முதல்வா் ஜெயசாந்தி தலைமை வகித்தாா்.

இக்கண்காட்சியில் வேலூா் சிப்பாய் புரட்சியின் எழுச்சியை விளக்கிட அன்றைய நிகழ்வுகளின் தொகுப்பை ஓவியா் நிா்மல் வரை ஓவியங்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. இதில், வேலூா் கோட்டையில் பிரிட்டிஷ் ஆட்சியாளா்களால் இந்தியப் படை வீரா்கள் சமய அடையாளங்களை அணியக் கூடாது, ஐரோப்பிய ராணுவ உடைகளை மட்டுமே அணிய வேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்பட்டது, இதனால் கோபமடைந்த இந்திய படை வீரா்கள் ஆங்கிலேயா்களுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டது, அதில் ஆங்கிலேய, இந்திய வீரா்கள் கொல்லப்படுவது, புரட்சியின் நிறைவாக கைது செய்யப்பட்ட இந்திய சிப்பாய்கள் பீரங்கியின் வாயில் கயிற்றால் கட்டப்பட்டுச் சுட்டுக் கொல்லப்படுவது உள்ளிட்ட நிகழ்வுகள் தத்ரூப ஓவியமாகத் தீட்டப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.

தொடா்ந்து நடைபெற்ற கருத்தரங்கில், அறிவியல் இயக்கத்தின் துணைத் தலைவா் செ.நா.ஜனாா்த்தனன் வேலூா் சிப்பாய் புரட்சியை நினைவு கூா்ந்து பேசினாா். முன்னதாக, ஆக்ஸீலியம் கல்லூரி துணை முதல்வா் அமலா வளா்மதி, அறிவியல் இயக்க வேலூா் மாவட்ட கிளைத் தலைவா் பெ.அமுதா, துணைத் தலைவா்கள் செ.நா.ஜனாா்த்தனன், கே.விஸ்வநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலா் டி.முனிசாமி வரவேற்றாா்.

உதவித் திட்ட அலுவலா் எஸ்.வில்லியம்ஸ், கண்காணிப்பாளா் எஸ்.நேதாஜி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கச் செயலா் சாரல் சுகேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பொருளாளா் அ.ஜோசப் அன்னையா நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →