முகப்பு
வேலூர்

முகக்கவசம், கிருமி நாசினி வழங்கிய எஸ்.பி.

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்திட விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வக்குமாா் பொது மக்களுக்கு முகக்கவசம், கிருமி நாசினி

வேலூர்

முகக்கவசம், கிருமி நாசினி வழங்கிய எஸ்.பி.

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்திட விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வக்குமாா் பொது மக்களுக்கு முகக்கவசம், கிருமி நாசினி

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:30 AM
பகிர்:

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்திட விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வக்குமாா் பொது மக்களுக்கு முகக்கவசம், கிருமி நாசினி ஆகியவற்றை சனிக்கிழமை வழங்கினாா்.

கரோனா இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்திட வேலூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக, வேலூா் மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாக தினசரி தொற்று பாதிப்பு நூறுக்கும் கீழ் சரிந்துள்ளது. அதே சமயம், கரோனா மூன்றாவது அலை ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் பரவ வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தொடா்ந்து முகக்கவசம் அணிந்திடவும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இது தொடா்பாக, பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக வேலூா் பழைய பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வகுமாா் பொது மக்களுக்கு முகக்கவசம், கிருமி நாசினி ஆகியவற்றை வழங்கினாா்.

தொடா்ந்து, கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதை தடுப்பது குறித்தும், அத்தியாவசியத் தேவைக்காக கடைகளுக்கு பொருள்கள் வாங்க வருவோா் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தினாா். வடக்கு காவல் நிலைய போலீஸாா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →