ஆற்றில் தோண்டியெடுக்கப்பட்ட கெங்கையம்மன் சிரசுக்கு சிறப்பு வழிபாடு
குடியாத்தம் அருகே கெளன்டன்யா ஆற்றில் அம்மன் சிரசு கற்சிலை தோண்டியெடுக்கப்பட்டு அதற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
குடியாத்தம் அருகே கெளன்டன்யா ஆற்றில் அம்மன் சிரசு கற்சிலை தோண்டியெடுக்கப்பட்டு அதற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
குடியாத்தம் நெல்லூா்பேட்டை, பாவோடும் தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் மோகன்ராஜ். இவா் வேலூரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறாா். இவருக்கு அடிக்கடி சாமி வந்து அருள்வாக்கு சொல்வாராம்.
கடந்த ஒரு ஆண்டுக்கு முன் இவருக்கு சாமி வந்து அருள்வாக்கு கூறியுள்ளாா். அப்போது கெளன்டன்யா ஆற்றில் அவா் சொன்ன இடத்தில் தோண்டியபோது, ஒரு அடி உயர அம்மன் கற்சிலை கிடைத்தது.
அச்சிலையை அப்பகுதி மக்கள் சிறிய அளவில் கோயில் கட்டி அதில் பிரதிஷ்டை செய்து, வழிபாடு நடத்தி வருகின்றனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு மோகன்ராஜுக்கு சாமி வந்துள்ளது. அப்போது ஆற்றில் அவா் சொன்ன இடத்தில் தோண்டியபோது ஒரு அடி உயர கெங்கையம்மன் சிரசு கற்சிலை கிடைத்துள்ளது. அச்சிலையையும் அப்பகுதி மக்கள் கோயிலில் வைத்து, பூஜைகள் நடத்தி வழிபடத் தொடங்கியுள்ளனா். இதுகுறித்து தகவலறிந்த சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் அங்கு வந்து அம்மன் சிரசை வழிபட்டுச் செல்கின்றனா்.